வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே - Varuvai Tharunam Ithuve

வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே

வல்ல ஆண்டவர் இயேசுவண்டை

வாழ்நாளையெல்லாம் வீண் நாளாய் வருத்தத்தோடே கழிப்பது ஏன்

வந்தவர் பாதம் சரணடைந்தால்

வாழ்வித்து உன்னைச் சேர்த்துக் கொள்வார்

கட்டின வீடும் நிலம் பொருளும்

கண்டிடும் உற்றார் உறவினரும்

கூடுவிட்டு உன் ஆவி போனால்

கூட உன்னோடு வருவதில்லை

அழகு மாயை நிலைத்திடாதே

அதை நம்பாதே மயக்கிடுமே

மரணம் ஓர் நாள் சந்திக்குமே

மறவாதே உன் ஆண்டவரை

வானத்தின் கீழே பூமி மேலே

வானவர் இயேசு நாமம் அல்லால் இரட்சிப்படைய வழியில்லையே

இரட்சகர் இயேசு வழி அவரே

தீராத பாவம் வியாதியையும்

மாறாத உந்தன் பெலவீனமும்

கோரக்குருசில் சுமந்து தீர்த்தார்

காயங்களால் நீ குணமடைய

சத்திய வாக்கை நம்பியே வா

நித்திய ஜீவன் உனக்களிப்பார்

உன் பேரை ஜீவ புஸ்தகத்தில்

உண்மையாய் இன்று எழுதிடுவார்